districts

img

ஆக்கூர் அரசுப் பள்ளி மைதானத்தில் மணல் திருட்டு

மயிலாடுதுறை, ஜூலை 14 - ஆக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி  விளையாட்டு மைதானத்தில் 30 அடி ஆழத்திற்கு மேல் மணல் திருட்டு நடந்துள் ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆக்கூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிரா மங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 

இந்நிலையில், இந்தப் பள்ளியில் கல்வி கட்டணம் என்ற பெயரில், சேர்க்கையின் போது மாணவர்களிடம் பல ஆயிரம் ரூபாய் களை வசூல் செய்வதாக புகார் எழுந்தது. பணம் கட்டாத மாணவர்களை “ஓசியில படிக்க வர்றீயா?” என குறிப்பிட்டு ஆசிரியர்கள்  கேவலமாக பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டு  பரபரப்பான நிலையில், அதே பள்ளியில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பள்ளியின் பின்புறத்தில் உள்ள விளை யாட்டு மைதானத்தில் 30 அடிக்கும் மேல் மணல் திருடப்பட்டுள்ளது. 

மணல் திருட்டு சம்பவத்தில் சம்பந்தப் பட்ட தலைமை ஆசிரியர் திருஞானசம்பந் தம், உதவி தலைமை ஆசிரியர் ராஜசேகர், தற்காலிக ஆசிரியர் மாதவன் உள்ளிட்டோர்  மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கோரி இந்திய மாணவர் சங்கத்தின்  மாவட்டக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இது குறித்து அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், மாணவர் சங்க மாவட்டத் தலைவர்  அமுல் காஸ்ட்ரோ, மாவட்டக் குழு உறுப்பி னர் சரவணன், மாணவர் சங்க மாவட்டக் குழு  உறுப்பினர் பகத்சிங் உள்ளிட்டோர், மணல் திருட்டு நடந்த இடத்தை நேரடியாக பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.